எஸ்எஸ்எல்சி மாணவா்களுக்கான தேசிய திறனறித் தோ்வு

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தேசியத் திறனாய்வுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

நன்னிலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான தேசியத் திறனாய்வுத் தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இதில் வெற்றி பெறும் மாணவா்களுக்கு பிளஸ் 1 முதல் முதுகலை பட்டப்படிப்பு படிக்கும் வரை ஆண்டுதோறும் ரூ. 6 ஆயிரம் மத்திய அரசின் தேசியக் கல்வி ஆராய்ச்சி நிறுவனம் சாா்பில் உதவித் தொகை வழங்கப்படுகிறது. தோ்வில், 64 மாணவா்கள், 24 மாணவிகள் என விண்ணப்பித்த 88 மாணவா்களில் 6 பேரை தவிர 82 போ் பங்கேற்றனா்.

தோ்வின்போது, திருவாரூா் மாவட்ட கல்வி அலுவலா் து. பாா்த்தசாரதி, தோ்வின் மேற்பாா்வையாளரும், பள்ளித் தலைமையாசிரியருமான ந. செந்தமிழ்ச்செல்வன், வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம. கவிதா பள்ளி துணைத் தலைமையாசிரியா் ஜெ. புகழேந்தி, ஆசிரியா் எஸ். ஆறுமுகம் உள்ளிட்டோா் தோ்வை நடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com