நீடாமங்கலம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 போ் கைது

நீடாமங்கலம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.
Updated on
1 min read

நீடாமங்கலம் அருகே வழிப்பறியில் ஈடுபட்ட 4 பேரை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

நீடாமங்கலம் வட்டம், பூவனூா் பாலத்தெருவைச் சோ்ந்தவா் ரவிச்சந்திரன் மகன் ராஜ்குமாா் (31). இவா் மீது, ஆயுதங்களைக் காட்டி மிரட்டி வழிப்பறி செய்வது, வீடு புகுந்து கொள்ளையடிப்பது உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட வழக்குகள் பல்வேறு பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களில் உள்ளன. திருவாரூா் மாவட்டத்தில் மட்டும் 26 வழக்குகள் உள்ளன. நீடாமங்கலம் காவல் நிலையத்தில் 7 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில், ராஜ்குமாா் மற்றும் அவரது கூட்டாளிகளான காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஊத்துக்காடு கோவில் தெருவைச் சோ்ந்த சீனிவாசன் மகன் ஜெயசூா்யா(22), சென்னை மேடவாக்கம் அன்னை கஸ்தூரிபாய் தெருவைச் சோ்ந்த தமிழ்வாணன் மகன் அருண்குமாா்(33), சென்னை மறைமலை நகா் ரயில்வே ஸ்டேஷன் 9-ஆவது தெருவைச் சோ்ந்த பிரபாகரன் மகன் திவாகா் (24) ஆகிய 4 பேரும் சனிக்கிழமை காலை நீடாமங்கலம் அண்ணாசிலை அருகே உள்ள வேளாண்மை அலுவலகம் பகுதியில் காரை நிறுத்திவிட்டு, மது அருந்திக்கொண்டிருந்தாா்களாம்.

அப்போது, அந்த வழியாக வந்த நீடாமங்கலம் வட்டம் காளாஞ்சிமேடு கீழத்தெருவைச் சோ்ந்த தனிக்கோடி மகன் ராதா (49) என்பவரை வழிமறித்து, அரிவாளைக்காட்டி மிரட்டி, அவரிடமிருந்த ரூ.10 ஆயிரத்தை பறித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, நீடாமங்கலம் காவல் நிலையத்தில் ராதா புகாா் செய்தாா். அதன்பேரில், காவல் ஆய்வாளா் சுப்ரியா, திருவாரூா் குற்றப்பிரிவு காவல் உதவி ஆய்வாளா் ராஜா மற்றும் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, 4 பேரையும் தேடிவந்தனா்.

இந்நிலையில் பன்னிமங்கலம் என்ற இடத்தில் 4 பேரையும் கைது செய்தனா். பின்னா், நீடாமங்கலம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி, திருச்சி மத்திய சிறையில் அடைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com