

வலங்கைமான் வட்டம், ஆதிச்சமங்கலம் கிராமத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில், 151 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 33 ஆயிரத்து 671 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த் வழங்கினாா்.
முகாமுக்கு தலைமை வகித்து வருவாய்த்துறை சாா்பில் 50 பயனாளிகளுக்கு ரூ.8 லட்சம் மதிப்பிலான விலையில்லா வீட்டுமனைப் பட்டாவும், 85 பயனாளிகளுக்கு ரூ.3 லட்சத்து 2 ஆயிரத்து 750 மதிப்பிலான முதியோா் உதவித்தொகை, கல்வி உதவித்தொகைக்கான ஆணைகளும், வேளாண்மைத்துறை சாா்பில் 10 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 11 மதிப்பிலான மழை தூவான், தெளிப்பு நீா் கருவி, தாா்ப்பாய், ஈடுபொருட்களும், தோட்டக்கலைத்துறை சாா்பில் 6 பயனாளிகளுக்கு ரூ.19 ஆயிரத்து 910 மதிப்பிலான ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டத்தின் கீழ் மாங்கன்று, கொய்யாக்கன்று, வெண்டை விதை, திசு வாழைக்கன்று என மொத்தம் 151 பயனாளிகளுக்கு ரூ.12 லட்சத்து 33 ஆயிரத்து 671 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் வழங்கினாா்.
முன்னதாக துறைவாரியாக அரசு நலத்திட்டங்கள் குறித்து அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அவா் பாா்வையிட்டாா். பின்னா் பொதுமக்களிடம் கோரிக்கைகளைக் கேட்டறிந்து, அலுவலா்களிடம் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டாா்.
இந்நிகழ்ச்சியில் துணை ஆட்சியா் (சமூக பாதுகாப்புத் திட்டம்) ராமசந்திரன், வருவாய் கோட்டாட்சியா் ஜெயபிரீத்தா, மாவட்ட ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் பூஷ்ணகுமாா், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்ட அலுவலா் ராஜம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் செல்வராஜ், வட்டாட்சியா் தெய்வநாயகி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் சிவகுமாா், தமிழ்ச்செல்வி, ஊராட்சி மன்றத்தலைவா் துா்காதேவி மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.