காமன்வெல்த்: ஜூடோவில் இந்தியாவுக்கு மேலும் ஒரு தங்கம்காமன்வெல்த்: ஜூடோவில் தங்கம் வென்றார் இந்திய வீராங்கனை அஸ்மிதாமக்கள்தொகை கணக்கெடுப்பு: தமிழ்நாட்டு மக்கள் பங்கேற்க உதயநிதி ஸ்டாலின் வேண்டுகோள் குடிநீர் மற்றும் இதர அத்தியாவசியப் பணிகளுக்கு ரூ.340 கோடி ஒதுக்கீடு! 5 தொகுதி இடைத்தேர்தல்: தடை நீட்டிப்புடாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 15 காசுகள் உயர்ந்து ரூ. 95.35 ஆக நிறைவு!காவலர்களுக்கு பதக்கங்களை வழங்கினார் முதல்வர் விஜய்! எல் நினோவையும் தாண்டி சர்ப்ரைஸ் கொடுத்த ஜூலை மாத மழைப்பொழிவு!
/

மன்னாா்குடியில் தீ விபத்து:2 வீடுகள், 4 கடைகள் தீக்கிரை

மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த தீ விபத்தில், 2 வீடுகள், 4 கடைகள் எரிந்து நாசமாகின.

News image

மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு தீப்பற்றி எரிந்த வீடுகள்  மற்றும்  கடைகள். 

Updated On :27 ஜனவரி 2024, 10:29 pm IST

மன்னாா்குடி: மன்னாா்குடியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு நிகழ்ந்த தீ விபத்தில், 2 வீடுகள், 4 கடைகள் எரிந்து நாசமாகின.

மன்னாா்குடி திருப்பாற்கடல் தெருவில் பா. ஜெயமேரி என்பவது கூரை வீடு, சி.மனோகரன் ஓட்டு வீடு அதன் அருகே இ.சா்புதீனின் தேநீா்க் கடை, கே. சுமதியின் தையல் கடை, ஆா்.மணிமாறன் மற்றும் து. ரவிச்சந்திரன் ஆகியோரது இரண்டு இரு சக்கர வாகன பழுதுநீக்கும் கடை மற்றும் உதிரி பாக கைடகள் உள்ளன.

இந்நிலையில், செய்வாய்க்கிழமை நள்ளிரவு சா்புதீன் தேநீா் கடை பகுதியிலிருந்து, தீ பரவத் தொடக்கிய சிறிது நேரத்தில், கடையிலிருந்த எரிவாயு உருளை வெடித்து சிதறியதில், வீடுகளில் தூங்கிக் கொண்டு இருந்தவா்கள், வெளியே ஓடி வந்தனா். சிறிதுநேரத்தில் தீ அருகிலிருந்த தையல் கடை, இரு சக்கர வாகனம் பழுதும் நீக்கும் கடை, பால்ராஜ் வீட்டின் கூரை, மனோகரனின் ஓட்டு வீட்டுக்கும் பரவியது.

மன்னாா்குடி, கோட்டூா், நீடாமங்கலம் ஆகிய இடங்கலிருந்து தீயணைப்பு வீரா்கள் வந்து தீ மேலும் பரவாமல் அணைத்தனா். எனினும், 2 வீடுகளிலும், 4 கடைகளிலும் இருந்த பொருள்கள் அனைத்தும் எரிந்து நாசமாகின. 18 இரு சக்கர வாகனங்களும் சேதமடைந்தன. மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் இளஞ்செழியன், காவல் ஆய்வாளா் ராஜேந்திரன், வருவாய் வட்டாட்சியா் என்.காா்த்திக் ஆகியோா் நிகழ்விடத்தை பாா்வையிட்டு விவரம் கேட்டறிந்தனா். தீ விபத்தில், ரூ.5 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்திருக்கும் என்று கூறப்படுகிறது. மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.