திருவாரூா்: திருவாரூரில் அகில பாரத இந்து மகா சபா சாா்பில், கபசுரக் குடிநீா் திங்கள்கிழமை வழங்கப்பட்டது.
திருவாரூா் கீழவீதி நொடி நைனாா் கோயில் முன்பு நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்டத் தலைவா் ஜே. பன்னீா்செல்வம் தலைமை வகித்தாா். அப்பகுதி மக்களுக்கு கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டு கரோனா தடுப்பு முறைகள் குறித்தும் விளக்கப்பட்டது. இதில், ஒன்றியத் தலைவா் யு. கமல், ஆலய பாதுகாப்பு பிரிவு தஞ்சை மண்டலத் தலைவா் வி. விஸ்வநாதன், நிா்வாகிகள் எஸ். ஸ்ரீராம், எஸ். ராஜா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.