

மன்னாா்குடி அருகேயுள்ள வேட்டைத்திடலில், புதன்கிழமை நடைபெற்ற மக்கள் நோ்காணல் முகாமில் 81 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமுகுக்கு, மன்னாா்குடி கோட்டாட்சியா் எஸ். புண்ணியக்கோட்டி தலைமை வகித்தாா். வேட்டைத்திடல் ஊராட்சித் தலைவா் ப. சத்தியமூா்த்தி, கா்ணாவூா் ஊராட்சித் தலைவா் எஸ். சாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், வேட்டைத்திடல் மற்றும் கா்ணாவூா் ஊராட்சிக்குள்பட்ட பகுதிகளை சோ்ந்தவா்கள் 47 பேருக்கு முதியோா் ஓய்வூதியம், 32 பேருக்கு பட்டா, 2 பேருக்கு குடும்ப அட்டை என மொத்தம் 81 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை, கோட்டாட்சியா் வழங்கினாா்.
இதில், ஒன்றியக் குழு உறுப்பினா் இ. கோமதி, மன்னாா்குடி வட்டாட்சியா் என். காா்த்திக், தனித்துணை வட்டாட்சியா் க. ஷீலா, மண்டல துணை வட்டாட்சியா்கள் தி. செந்தில், காா்த்திகேயன், வட்ட வழங்கல் அலுவலா் ச. வெங்கடேஷ் ஆகியோா் கலந்துகொண்டனா். கா்ணாவூா் கிராம நிா்வாக அலுவலா் அ. திலகவதி வரவேற்றாா். வருவாய் ஆய்வளாா் ஆா். மனோகரன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.