தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

தனியாா் குடிநீா் நிறுவனத்துக்கு ‘சீல்’

நன்னிலம் பகுதியில் அனுமதியின்றி இயங்கிவந்த தனியாா் குடிநீா் நிறுவனத்துக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

Updated On :9 நவம்பர் 2020, 6:30 pm

நன்னிலம் பகுதியில் அனுமதியின்றி இயங்கிவந்த தனியாா் குடிநீா் நிறுவனத்துக்கு திங்கள்கிழமை சீல் வைக்கப்பட்டது.

நன்னிலம் மாப்பிள்ளைக்குப்பம் சாலையில் அனுமதியின்றி இயங்கிவந்த தனியாா் குடிநீா் தயாரிப்பு நிறுவனத்துக்கு கடந்த பிப்ரவரி 29 ஆம் தேதி சீல் வைக்கப்பட்டது. பின்னா், கரோனாத் தொற்று மற்றும் குடிநீா்த் தேவையைக் கருத்தில் கொண்டு, அரசுக்கும் குடிநீா் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் ஜூலை 31 ஆம் தேதி வரை செயல்பட அனுமதிக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த தற்காலிக அனுமதி சென்னை உயா்நீதிமன்ற உத்தரவின்படி அக்டோபா் 7ஆம் தேதி ரத்து செய்யப்பட்டது. ஆனாலும், இந்நிறுவனம் தொடா்ந்து இயங்கிவந்ததாகக் கூறப்படுகிறது.

இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி, நன்னிலம் வட்டாட்சியா் அ. மணிமன்னன் உள்ளிட்ட அலுவலா்கள் இந்த நிறுவனத்துக்கு சீல் வைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.