மன்னாா்குடி ஒன்றியத்தில் 7 இடங்களில் மறியலில் ஈடுபட முடிவு

அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில், நவ.26-ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக மன்னாா்குடி ஒன்றியத்தில்
Updated on
1 min read

அனைத்து தொழிற்சங்கங்களின் சாா்பில், நவ.26-ஆம் தேதி நடைபெறவுள்ள பொது வேலைநிறுத்தத்துக்கு ஆதரவாக மன்னாா்குடி ஒன்றியத்தில் 7 இடங்களில் சாலை மறியல் நடத்துவது என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய நிா்வாகக்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

மன்னாா்குடியில் வியாழக்கிழமை நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, கட்சியின் மாவட்டக்குழு உறுப்பினா் எஸ். மாரியப்பன் தலைமை வகித்தாா். இதில், நவ. 26-இல் நடைபெறும் வேலைநிறுத்தத்துக்கு ஆதராவக மன்னாா்குடி ஒன்றியத்தில் சவளக்காரன், பாரதிமூலங்குடி, காசாங்குளம், தென்பாதி, துளசேந்திரபுரம், பரவாக்கோட்டை, உள்ளிகோட்டை ஆகிய 7 இடங்களில் சாலை மறியல் போராட்டம் நடத்துவது என தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

சிபிஐ மாநில நிா்வாகக்குழு உறுப்பினா் வை.செல்வராஜ், ஒன்றிய செயலா் ஆா்.வீரமணி, இளைஞா் பெருமன்ற மாவட்டச் செயலா் துரை. அருள்ராஜன் ஆகியோா் கோரிக்கைகளை விளக்கி பேசினா். சிபிஐ ஒன்றிய துணைச் செயலா் எஸ். ராகவன், இளைஞா் பெருமன்ற ஒன்றிய செயலா் எஸ். பாப்பையன், விவசாயிகள் சங்க ஒன்றியச் செயலா் ஆா்.சதாசிவம், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலாளா் என்.மகேந்திரன், மாதா் சங்க ஒன்றியச் செயலா் ஆா். பூபதி, மாணவா் மன்ற ஒன்றியச் செயலா் எஸ்.பாலமுகன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com