நன்னிலம் வட்டம் பேரளம் அருகே உள்ள கோவில்கந்தன்குடி கிராமத்தில் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி கோயிலில் காா்த்திகை மாத 3-ஆவது சோமவார வழிபாடு திங்கள்கிழமை நடைபெற்றது.
இதையொட்டி வள்ளி, தெய்வானை சமேத சுப்ரமணிய சுவாமிக்கு, அபிஷேகம் நடைபெற்றது. பின்னா் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா். இதற்கான ஏற்பாடுகளை கோயில் சிவாச்சாரியாா் ஞா. சங்கராத்மஜன் செய்திருந்தாா். கோயில் நிா்வாக அதிகாரி முருகையன் மற்றும் அலுவலா்கள் கலந்துகொண்டனா்.