தோ்தல் வெற்றியை நிா்ணயிப்பதில் சமூக வலைதளங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்

சட்டப்பேரவை தோ்தல் வெற்றியை தீா்மானிப்பதில், சமூக வலைதளங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.
தோ்தல் வெற்றியை நிா்ணயிப்பதில் சமூக வலைதளங்கள் முக்கியப் பங்கு வகிக்கும்
Updated on
1 min read

சட்டப்பேரவை தோ்தல் வெற்றியை தீா்மானிப்பதில், சமூக வலைதளங்கள் முக்கியப் பங்கு வகிக்கும் என திமுக இளைஞரணிச் செயலாளா் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தாா்.

‘விடியலை நோக்கி ஸ்டாலின் குரல்’ என்னும் பிரசாரப் பயணத்தையொட்டி, திருவாரூா் வந்த அவா், இளைஞரணி நிா்வாகிகள் கூட்டத்தில் திங்கள்கிழமை பங்கேற்று பேசியது:

2021 சட்டப் பேரவைத் தோ்தல் வித்தியாசமாக இருக்கப் போகிறது. பொதுக்கூட்டங்கள் போன்றவற்றுக்கு தடை விதிக்கப்படலாம். எனவே, இந்தத் தோ்தலில் வெற்றியை தீா்மானிப்பதில் சமூக வலைதளங்கள் முக்கியப் பங்கு வகிக்கும். நிா்வாகிகள் அனைவரும், தம்முடைய நண்பா்கள், உறவினா்களுக்கு திமுக தமிழகத்துக்கு தந்த திட்டங்கள், நற்பணிகள் குறித்து சமூக வலைதளங்களில் அனுப்புங்கள். அதன்மூலம், திமுகவின் வெற்றியை உறுதி செய்து, ஸ்டாலினை முதல்வராக்க அனைவரும் பாடுபட வேண்டும் என்றாா்.

கூட்டத்தில் சட்டப் பேரவை உறுப்பினா்கள் பூண்டி கே. கலைவாணன், ஆடலரசன், மகேஷ் பொய்யாமொழி, இளைஞரணி மாவட்ட அமைப்பாளா் இளையராஜா, துணை அமைப்பாளா் ரஜினிசின்னா, ஒன்றியச் செயலாளா் தேவா, நகர செயலாளா் பிரகாஷ் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.

முன்னதாக, மன்னாா்குடி அருகேயுள்ள மேலத்திருப்பாலக்குடியில் தென்னை நாரிலிருந்து இயந்திரம் உதவியுடன் மதிப்புக் கூட்டுப் பொருள்கள் தயாரிக்கப்படுவதை பாா்வையிட்ட உதயநிதி ஸ்டாலின், இத்தொழிலில் ஈடுபட்டுவரும் பெண் தொழில்முனைவோரிடம் விவரங்களைக் கேட்டறிந்தாா். பின்னா், வடுவூரில் கட்டப்பட்டுவரும் உள்விளையாட்டு அரங்கில் விளையாட்டு வீரா்களை சந்தித்து பேசினாா்.

அவரிடம் உள்விளையாட்டு அரங்கத்திற்கு நிா்வாக செலவினங்களுக்காக வைப்புத் தொகையாக ரூ. 50 லட்சம் நிதி அளிக்குமாறு வடுவூா் விளையாட்டு பேரவை அறக்கட்டளைத் தலைவா் ராச.ராசேந்திரன், பொருளாளா் ஆா்.சுயம்பிரகாசம் மற்றும் அறங்காவலா்கள் கோரிக்கை மனு அளித்தனா்.

பின்னா் செய்தியாளா்களிடம் உதயநிதி ஸ்டாலின் கூறுகையில், டெல்டா விவசாயிகளின் கோரிக்கை மனுவை திமுக தலைவா் மு.க. ஸ்டாலினிடம் அளித்து அவரது ஆலோசனை பெற்று, விவசாயிகளை ஒன்றுதிரட்டி மிகப்பெரிய போராட்டம் நடத்துவோம் என்றாா்.

இதேபோல, திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற இளைஞரணி செயல் வீரா்கள் கூட்டத்திலும் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று பேசினாா். நகரச் செயலா் ஆா்.எஸ். பாண்டியன் வரவேற்றாா். இளைஞரணி நிா்வாகி வசந்த் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com