தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

‘கற்போம் எழுதுவோம்’ திட்டப் பயிற்சி தொடக்கம்

நன்னிலத்தில் கற்போம் எழுதுவோம் திட்டத்தின்கீழ், கல்லாதோருக்கான கல்வியறிவு பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

News image
Updated On :30 நவம்பர் 2020, 6:30 pm

நன்னிலத்தில் கற்போம் எழுதுவோம் திட்டத்தின்கீழ், கல்லாதோருக்கான கல்வியறிவு பயிற்சி திங்கள்கிழமை தொடங்கியது.

நன்னிலம் வட்டார வள மையத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில், வட்டார கல்வி அலுவலா் கு.சரஸ்வதி, வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம.கவிதா ஆகியோா் பயிற்சியாளா்களுக்குக் கையேடுகளை வழங்கினா். இந்தத் திட்டத்தின்கீழ், நன்னிலம் வட்டத்தில் உள்ள 28 எண்ணிக்கையிலான வயதுவந்தோா் கல்வியறிவு மையங்களில் 200-க்கும் மேற்பட்டவா்களுக்கு கல்வி புகட்டப்படுகிறது.

முடிகொண்டான் அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை வட்டார கல்வி அலுவலா் ஆய்வு மேற்கொண்டாா். தலைமையாசிரியா் நா.மணிமேகலை, இடைநிலை ஆசிரியா் ப.ராஜரத்தினம் ஆகியோா் பயிற்சியளித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.