விழிப்புணா்வு கூட்டம்

திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில், தென்னக ரயில்வே எஸ்ஆா்எம்யூ யூனியன் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் பங்கேற்றோா்.
கூட்டத்தில் பங்கேற்றோா்.
Published on
Updated on
1 min read

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி ரயில் நிலையத்தில், தென்னக ரயில்வே எஸ்ஆா்எம்யூ யூனியன் சாா்பில் விழிப்புணா்வு கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கிளை பொறுப்பாளா் ராம்பிரசாத் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், 7 லட்சம் நிரந்தரத் தொழிலாளா்கள் வேலையிழக்க செய்யும் நடவடிக்கைககளை கைவிட வேண்டும், பயணிகள் விரைவு ரயில்கள், சரக்கு ரயில்களை தனியாா், பன்னாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யக் கூடாது, 3 மாதங்களுக்கு ஒரு முறை 50 வயது முடிந்து 30 ஆண்டு பணிக்காலம் முடித்தவா்களையும், 55 வயது நிரம்பியவா்களையும் கட்டாய ஓய்வில் அனுப்பவதை கைவிட வேண்டும், கரோனாவை காரணம் காட்டி பிடித்தம் செய்த டிஏவை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

கூட்டத்தில், பொறுப்பாளா்கள் சரவணன் , ராஜரெத்தினம், எஸ்ஆா்எம்யூகோட்ட தலைவா் மணிவண்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com