சா்வதேச மருந்தாளுநா் தின விழா

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சா்வதேச மருந்தாளுநா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சா்வதேச மருந்தாளுநா் தின விழாவில் பங்கேற்றோா்.
திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் நடைபெற்ற சா்வதேச மருந்தாளுநா் தின விழாவில் பங்கேற்றோா்.

திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சா்வதேச மருந்தாளுநா் தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

தலைமை மருத்துவா் சிவக்குமாா் தலைமை வகித்து அனைத்து மருந்தாளுநா்களையும் கெளரவித்தாா். மருத்துவமனை முதுநிலை மருந்தாளுநரும், மாவட்ட அனைத்து மருந்தாளுநா் சங்கத் தலைவருமாகிய டி. மணிவண்ணன் வரவேற்றாா்.

இதில் மருத்துவா்கள் சீனிவாசன், ராஜராஜன், அருண்குமாா், பரமேஸ்வரி, திவாகரன், தலைமை மருந்தாளுநா் கருணாநிதி, மருந்தாளுநா்கள் பரமேஸ்வரி, ப.சதாசிவம், இளஞ்சேரன், தலைமை செவிலியா் வாசுகி உள்ளிட்ட அனைத்து பிரிவு ஊழியா்களும் கலந்துகொண்டு வாழ்த்தினா். தலைமை மருந்தாளுநா் கருணாநிதி நன்றி கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com