நீடாமங்கலம்: வாக்கு எண்ணும் பணிக்கு 300 போ் நியமனம்

நீடாமங்கலம் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணிக்காக 300 பேரும், இதர பணிக்காக 100 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.
பொதக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மைய அறையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்.
பொதக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை மைய அறையை பூட்டி சீல் வைத்த அதிகாரிகள்.
Updated on
1 min read

நீடாமங்கலம் ஒன்றியத்தில் வாக்கு எண்ணும் பணிக்காக 300 பேரும், இதர பணிக்காக 100 பேரும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் நீடாமங்கலம் ஒன்றியப் பகுதியில் பதிவான வாக்குகள் பொதக்குடியில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை எண்ணப்படுகின்றன. முன்னதாக, வாக்குச் சாவடிகளிலிருந்து கொண்டுவரப்பட்ட வாக்குப் பெட்டிகள் வாக்கு எண்ணிக்கை மைய அறைகளில் வைத்து செவ்வாய்க்கிழமை காலை 5 மணியளவில் அறைக்கு பூட்டி சீல் வைக்கப்பட்டது.

மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளா் காா்த்தி, நீடாமங்கலம் தோ்தல் நடத்தும் அலுவலா் ஆறுமுகம் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் பூட்டி சீல் வைக்கப்பட்டது.

இந்த மையத்தில் வாக்கு எண்ணிக்கைக்காக 300 பேரும், இதர பணிக்காக 100 பேரும் எனமொத்தம் 400 போ் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com