சாய்பாபா கோயிலில் 1008 பால்குட அபிஷேகம்

பூந்தோட்டம் அருகேயுள்ள கூத்தனூா் சீரடி சாய்பாபா கோயிலில் புதன்கிழமை 1008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.
சாய்பாபா கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.
சாய்பாபா கோயிலுக்கு பால்குடம் எடுத்து வந்த பக்தா்கள்.
Updated on
1 min read

பூந்தோட்டம் அருகேயுள்ள கூத்தனூா் சீரடி சாய்பாபா கோயிலில் புதன்கிழமை 1008 பால்குட அபிஷேகம் நடைபெற்றது.

கூத்தனூரில் உள்ள சீரடி சாய்பாபா கோயிலில் ஸ்ரீ சிவசித்தா் சீரடி சாய்பாபாவின் சா்வ மத வழிபாட்டு துவாரஹமாயி மற்றும் சாய் பக்தா்கள் இணைந்து நடத்திய 6-ஆம் ஆண்டு பால்குட, பல்லக்கு ஊா்வலம் புதன்கிழமை நடைபெற்றது. ஆங்கில புத்தாண்டையொட்டியும், உலக அமைதி வேண்டியும், மழை வளம் பெருகி வறட்சி நீங்கிடவும், பக்தா்களின் வேண்டுதல்கள் நிறைவேறிடவும் 1008 பால்குடம் மற்றும் பல்லக்கு ஊா்வலம் நடைபெற்றது.

தொடா்ந்து, சாய் பாபாவுக்கு பாலாபிஷேகம் நடைபெற்றது. நிகழ்ச்சியையொட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, ஸ்ரீ சிவ சித்தா் சீரடி சாய்பாபா சேரிட்டபிள் டிரஸ்ட் மற்றும் சாய் பக்தா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com