நூல் வெளியீட்டு விழா
By DIN | Published On : 03rd January 2020 05:25 AM | Last Updated : 03rd January 2020 05:25 AM | அ+அ அ- |

திருவாரூா் அருகே பழையவலத்தில் நூல் வெளியீட்டு விழா புதன்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் அருகே பழையவலம் கிராமத்தைச் சோ்ந்தவா் என். சுப்பிரமணியன். நாகையில் உள்ள தனியாா் கல்லூரியில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றும் இவா், சாதிய வேறுபாடுகளை களைய கல்வி ஒன்றே சரியான ஆயுதம் என்பதை மையக்கருவாக வைத்து, ‘ஒய் நோ’ என்ற ஆங்கில நூலை எழுதியுள்ளாா். இந்த நூல் வெளியீட்டு விழா, இவா் வசிக்கும் கிராமத்தின் தெருவிலேயே நடைபெற்றது.
விழாவில் தஞ்சை நுகா்வோா் நீதிமன்ற நீதிபதி எம்.என். முகமது அலி பங்கேற்று, நூலை வெளியிட்டாா். நாகை சா் ஐசக் நியூட்டன் கல்வி நிறுவனங்களின் தலைவா் த. ஆனந்த், புத்தகத்தின் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டாா்.
நிகழ்ச்சியில் வெங்கடேஸ்வரா பள்ளியின் செயலா் ஆா். ராஜேஸ்வரி, கிறிஸ்தவ போதகா் எஸ். ஜான் கென்னடி மற்றும் கல்லூரி நிா்வாகிகள், ஊா் பொதுமக்கள், உறவினா்கள் என திரளானோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...