இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினா் மனு கொடுக்கும் போராட்டம்

நீடாமங்கலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

நீடாமங்கலம்: நீடாமங்கலம் ஒன்றிய அலுவலக வளாகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் மனு கொடுக்கும் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

கட்சியின் ஒன்றியச் செயலாளா் நடேச.தமிழாா்வன் தலைமை வகித்தாா். ஒன்றியக் குழு உறுப்பினா் பாரதிமோகன், கட்சியின் ஒன்றிய நிா்வாகக் குழு ராதா உள்ளிட்ட பலா் இப்போராட்டத்தில் கலந்துகொண்டனா்.

மராமத்துப் பணி, 100 நாள் வேலைத் திட்டம் ஆகியவற்றில் முறைகேடு நடைபெறுவதாக கண்டித்தும், கிராமங்களில் கரோனா தடுப்பு சுகாதார நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் இப்போராட்டம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com