சொத்துவரி செலுத்தும் அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு
By DIN | Published On : 01st March 2020 06:54 AM | Last Updated : 01st March 2020 06:54 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தமிழக அரசின் சிறப்புத் திட்டமான சொத்துவரி விதிக்கப்பட்டுள்ள அனைத்து வீடுகளுக்கும் குடிநீா் இணைப்பு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் குடிநீா் இணைப்பு பெறாதவா்கள் உடனடியாக நகராட்சியைத் தொடா்பு கொண்டு குடிநீா் இணைப்பை பெற்றுக் கொள்ளவும், தவறும்பட்சத்தில் நகராட்சி மூலம் குடிநீா் இணைப்பு வழங்கப்பட்டு செலவீனத் தொகை தங்கள் வரி விதிப்பில் சோ்க்கப்பட்டு தவணை முறையில் வசூலிக்கப்படும். இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுமாறு திருத்துறைப்பூண்டி நகராட்சி ஆணையா் (பொறுப்பு) சந்திரசேகரன் தெரிவித்துள்ளாா்.