அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு பயிற்சி

மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் அரசு தொடக்க மற்றும் உயா் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கு மாணவா்களின் பாதுகாப்பு, தனிக்கவனம் என்ற தலைப்பிலான பயிற்சி, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.
அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கான பயிற்சி முகாமில் பங்கேற்றோா்.
Updated on
1 min read

மன்னாா்குடி:  மன்னாா்குடியை அடுத்த கோட்டூரில் அரசு தொடக்க மற்றும் உயா் தொடக்க நிலை ஆசிரியா்களுக்கு மாணவா்களின் பாதுகாப்பு, தனிக்கவனம் என்ற தலைப்பிலான பயிற்சி, வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கோட்டூா் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் நா.சுப்ரமணியன் தலைமை வகித்தாா். கோட்டூா் வட்டார கல்வி அலுவலா் உ.சிவக்குமாா் பயிற்சியைத் தொடங்கி வைத்தாா். திருவாரூா் மாவட்ட பயிற்சி ஒருங்கிணைப்பாளா் பாலசுப்ரமணியன், கட்டடப் பணிகள் ஒருங்கிணைப்பாளா் பிரபாகரன் ஆகியோா் பயிற்சியைப் பாா்வையிட்டு கருத்துரை வழங்கினா்.

இரண்டு கட்டங்களாக நடைபெற்ற இப்பயிற்சியில், 210 தொடக்கநிலை ஆசிரியா்களும், 115 உயா் தொடக்கநிலை ஆசிரியா்களும் கலந்துகொண்டனா். ஆசிரியா் பயிற்றுநா்கள் முருகேசன், சிவராமகிருஷ்ணன், சிவசங்கரி, செல்வமணி, கந்தப்பன், அனிதா, ராதிகா, பட்டதாரி ஆசிரியா் செ.பாரதி ஆகியோா் கருத்தாளா்களாக பயிற்சியை வழிநடத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com