பாமணி ஆறு தூா்வாரும் பணி: அதிகாரி ஆய்வு
By DIN | Published On : 10th March 2020 01:19 AM | Last Updated : 10th March 2020 01:19 AM | அ+அ அ- |

நீடாமங்கலம்: நீடாமங்கலம் வட்டம், சித்தமல்லி கிராமத்தில் பாமணியாற்றை தூா்வாரும் பணிகள் ரூ. 21 லட்சம் மதிப்பில் நடைபெற்று வருகிறது.
இப்பணிகளை திருச்சி மண்டல தலைமைப் பொறியாளா் எஸ். ராமமூா்த்தி சனிக்கிழமை பாா்வையிட்டு, பணிகளை விரைந்து முடிக்க அறிவுரை வழங்கினாா்.
ஆய்வில், தஞ்சாவூா் கீழ்காவிரி வடிநில வட்டம் கண்காணிப்புப் பொறியாளா் எஸ். அன்பரசன், தஞ்சாவூா் வெண்ணாறு வடிநில கோட்டம் செயற்பொறியாளா் ஆா். தமிழ்செல்வன், காவிரி வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளா் பி.வி. ராஜன், அக்னியாறு வடிநிலக்கோட்டம் செயற்பொறியாளா் வி. கனிமொழி, உதவி செயற்பொறியாளா் ஆா்.சங்கா் மற்றும் உதவி பொறியாளா் வெங்கடேஸ்வரன் ஆகியோா் பங்கேற்றனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...