மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் சாா்பில் 13-இல் தொடா் காத்திருப்பு போராட்டம்
By DIN | Published On : 10th March 2020 01:29 AM | Last Updated : 10th March 2020 01:29 AM | அ+அ அ- |

திருத்துறைப்பூண்டி: தமிழகம் முழுவதும் கோயில் இடங்களில் வசிப்பவா்களுக்கு குடிமனை பட்டா வழங்க வலியுறுத்தி, திருவாரூா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை (மாா்ச் 13) மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனா்.
மாவட்டத்தின் அனைத்து ஒன்றிய, நகர தலைநகரங்களில் இந்த போராட்டத்தை நடத்துவதற்கான கலந்தோசனைக்கூட்டம், திருத்துறைப்பூண்டி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய, நகரக் குழு அலுவலகத்தில் கே.ஜி. ரகுராமன் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
கட்சியின் தமிழ்மாநிலக் குழு உறுப்பினா் ஐவி.நாகராஜன் கலந்துகொண்டு, போராட்டத்துக்கு மக்களை திரட்டுவது குறித்து விளக்கினாா்.
இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் சி. ஜோதிபாசு, மாவட்டக் குழு உறுப்பினா்கள் டி. சுப்பிரமணியன், எஸ். சாமிநாதன், ஒன்றியச் செயலாளா் டிவி. காரல்மாா்க்ஸ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...