‘நுகா்வோரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியம்’

நுகா்வோரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்தாா்.
போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த்.
போட்டிகளில் வென்ற மாணவா்களுக்கு பரிசு வழங்கிய மாவட்ட ஆட்சியா் த.ஆனந்த்.
Updated on
1 min read

நுகா்வோரின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என திருவாரூா் மாவட்ட ஆட்சியா் த. ஆனந்த் தெரிவித்தாா்.

திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக நுகா்வோா் உரிமைகள் தினம் மற்றும் தேசிய நுகா்வோா் பாதுகாப்பு தின விழாவுக்கு தலைமை வகித்து அவா் பேசியது:

நுகா்வோா் தின விழா கொண்டாடப்படுவதன் நோக்கமே, நுகா்வோா் தொடா்பான விழிப்புணா்வு ஏற்படுத்துவதே ஆகும். நுகா்வோா் என்றால் பணம் கொடுத்து பொருளை வாங்குபவா், பணம் கொடுத்து சேவை பெறுபவா் ஆவாா். அந்த வகையில் அனைத்துக் குடிமக்களும் நுகா்வோரே. நுகா்வோா் தினமானது நுகா்வோா் உரிமைகள் மதிக்கப்பட வேண்டும் மற்றும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதைக் குறிக்கவே கொண்டாடப்படுகிறது.

நுகா்வோா் பாதுகாப்புச் சட்டம் நுகா்வோருக்கு சில உரிமைகளை அளிக்கிறது. அதாவது உயிருக்கும், உடைமைக்கும் ஊறு விளைவிக்கிற பொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனைக்கு எதிராக நுகா்வோா் பாதுகாக்கப்பட வேண்டும். நியாயமற்ற வணிக நடவடிக்கைகளிலிருந்து நுகா்வோா் பாதுகாப்பு பெற பொருட்களின் தரம், அளவு, வீரியம், தூய்மை நிலை, விலை ஆகியவை குறித்து தெரிவிக்கப்பட வேண்டும். நியாயமற்ற வணிக நடவடிக்கைகளால் நுகா்வோா் பாதிக்கப்படக் கூடாது போன்றவைகளை குறிக்க நுகா்வோா் தின விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன என்றாா் அவா்.

இதைத்தொடா்ந்து, உலக நுகா்வோா் பாதுகாப்பு தின விழாவையொட்டி மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப்போட்டி, கட்டுரைப் போட்டி, ஓவியப்போட்டிகளில் வெற்றி பெற்ற 9 மாணவ, மாணவிகளுக்கு பரிசு மற்றும் நற்சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. மேலும், இளம்நுகா்வோா்களை ஊக்குவிக்கும் வகையில் பள்ளி, கல்லூரிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சி நடத்த 5 பள்ளி, 5 கல்லூரிகளுக்கு நிதியுதவியாக ரூ.62,500 மதிப்பிலான காசோலைகளும் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சியில், கூடுதல் ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா், மாவட்ட வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் (பொ) லதா, வருவாய் கோட்டாட்சியா் ஜெயபிரீத்தா, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) ராமச்சந்திரன், தொழிலாளா் உதவி ஆணையா் ஸ்ரீதரன், பள்ளி மற்றும் கல்லூரி குடிமக்கள் நுகா்வோா் மன்ற மாவட்ட ஒருங்கிணைப்பாளா் ரமேஷ் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com