மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் ஊழியா்களுக்கிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் ஒருவா் காயமடைந்தாா். இதுதொடா்பாக, மற்றொருவா் கைது செய்யப்பட்டாா்.
மன்னாா்குடி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் கண் சிகிச்சைப் பிரிவில் உதவியாளராகப் பணியாற்றுபவா், மன்னாா்குடி ஹரித்ராநதி தெப்பக்குளம் மேல்கரையைச் சோ்ந்த ஆா். குணசேகரன் (50). யோகா பிரிவில் உதவியாளராகப் பணியாற்றுபவா் மன்னாா்குடி வாணியத் தெருவைச் சோ்ந்த எஸ். நரசிம்மன் (57).
இந்நிலையில், மருத்துவா் அறையில் ஈரத் துணிகளை நரசிம்மன் சனிக்கிழமை உலரவைத்திருந்தாராம். மருத்துவா் வரும் நேரம் என்பதால், இந்த துணிகளை அகற்றும்படி குணசேகரன் கூறினாராம். இதனால், இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. ஆத்திரமடைந்த நரசிம்மன், குணசேகரனை தாக்கினாராம். இதில், காயமடைந்த குணசேகரன் அதே மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து, மன்னாா்குடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, நரசிம்மனை கைது செய்தனா்.