அம்பான் புயல் எதிரொலி: முத்துப்பேட்டை பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

தென் வங்கக்கடலில் உருவாகியுள்ள அம்பான் புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள
அம்பான் புயல் எதிரொலி: முத்துப்பேட்டை பகுதி மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை

தென் வங்கக்கடலில் உருவாகியுள்ள அம்பான் புயல் காரணமாக திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை பகுதியில் உள்ள பத்து கடலோர கிராமங்களைச் சேர்ந்த மீனவர்கள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என கடலோர காவல் குடும்பத்தினரும் மீன்வளத் துறையினரும் எச்சரித்துள்ளனர்.

வங்கக் கடலில் உருவான புயல் அதி தீவிரம் அடைந்து ஞாயிற்றுக்கிழமை இரவு சென்னைக்கு 650 கிலோ மீட்டரில் மையம்கொண்டு அது மே 20ம் தேதி மேற்கு வங்கத்திற்கும், வங்கதேசத்துக்கும் இடையே கரையை கடக்கும் என்று வானிலை ஆராய்ச்சி மையம் அறிவித்துள்ளதால் கடல் மீன்பிடி தடைக்காலம் உள்ளநிலையில் பைபர் மற்றும் நாட்டுப் படகுகளில் ஒரு நாட்டிக்கல் மைல் தூரத்திற்கு மீன்பிடிக்கச் செல்லும் மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என முத்துப்பேட்டை கடலோர காவல் ஆய்வாளர் ராஜசேகரன் மீனவர்களை எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com