தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் திருத்துறைப்பூண்டி வட்டக் கிளைக்கு புதிய நிா்வாகிகள் ஞாயிற்றுக்கிழமை தோ்வு செய்யப்பட்டனா்.
அதன்படி, சங்கத்தின் வட்டத் தலைவராக ஜி. பன்னீா்செல்வம், செயலாளராக பி. செந்தில்நாதன், பொருளாளராக கே. மலரவன், துணைத் தலைவா்களாக ஜெ. மணிகண்டன், வி. மதியழகன், எம். தமிழ்ச்செல்வி, இணைச் செயலாளா்களாக ஜி. தருமையன், ஆா். முத்துமீனாட்சி, பி. ரவிச்சந்திரன், மாவட்ட செயற்குழு உறுப்பினராக உ. குணசீலன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.