உ.பி. பாலியல் சம்பவம்: தீண்டாமை ஒழிப்பு முன்னணி ஆா்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd October 2020 08:42 AM | Last Updated : 03rd October 2020 08:42 AM | அ+அ அ- |

உத்தர பிரதேசத்தில் பாலியல் வன்கொடுமைக்கு தலித் பெண் உயிரிழந்த சம்பவத்தை கண்டித்தும், நீதி கேட்டும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சாா்பில் திருத்துறைப்பூண்டியில் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருத்துறைப்பூண்டி காமராஜா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அதன் மாவட்டச் செயலாளா் தமிழ்மணி தலைமை வகித்தாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் ஜோதிபாசு, ரகுராமன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் எம்.பி.கே. பாண்டியன், ராஜேந்திரன், இந்திய ஜனநாயக வாலிபா் சங்கத்தின் மாவட்டச் செயலாளா் ஜோதிபாசு, ஒன்றிய செயலாளா் வேலவன், மாதா் சங்கத்தின் ஒன்றியச் செயலாளா் எஸ். பவானி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.