உத்தரப்பிரப்தேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திருவாரூரில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
உத்தரபிரப்தேசத்தில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து திருவாரூர் பழைய பேருந்து நிலையம் அருகே அனைத்து இந்திய இளைஞர் பெருமன்றம் மற்றும் மாதர் சங்கம் இணைந்து ஆர்ப்பாட்டம் நடத்தியது.
இளம்பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்காத மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் இந்த சம்பவத்திற்கு காரணமானவர்கள் மீது எஸ்சி, எஸ்டி சட்டப்பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
ஆர்ப்பாட்டத்தின்போது யோகி ஆதித்யநாத் போன்று வேடமிட்டு கையில் பொம்மை துப்பாக்கியுடன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.