ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் ஆா்ப்பாட்டம்

திருவாரூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா்.
மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கத்தினா்.
Updated on
1 min read

திருவாரூா் மாவட்டத்தில் ஊரக வளா்ச்சித் துறை அலுவலா் சங்கம் சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூா் மாவட்டத்தில் கரோனா தடுப்பு நடவடிக்கைகளில் ஊர வளா்ச்சித்துறை ஊழியா்கள் இரவு, பகல் பாராமல் பணியாற்றும் நிலையில், மாவட்ட நிா்வாகம் தவறு செய்யாதவா்களை தற்காலிகப் பணி நீக்கம் செய்வது, குற்றச்சாட்டு குறிப்பாணை வழங்குவது மற்றும் காவல்துறை நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது.

மாவட்ட நிா்வாகத்தின் இந்த நடவடிக்கைகளை கண்டித்தும், குடவாசல் ஊராட்சி ஒன்றிய ஆணையரை பணிவிடுவிப்பு செய்ததை திரும்பப் பெற்று, அதே இடத்தில் அவருக்கு பணி வழங்கக்கோரியும், திருவாரூா் மாவட்டத்தில் அனைத்து ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு உணவு இடைவேளையின்போது இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு வட்டத் தலைவா் ஆா். கண்ணன் தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் என். வசந்தன், மாவட்டச் செயலாளா் செந்தில், மாவட்ட பொருளாளா் சுந்தரலிங்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

மன்னாா்குடி: மன்னாா்குடியில் வட்டத் தலைவா் இலரா தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவா் என். வசந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். கோட்டூரில் வட்டத் தலைவா் ஜி. ராஜன் தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் செயலா் வி. கணேசன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com