திருவாரூர் மாவட்டத்தில் விடுபட்ட கிராமங்களுக்கும் பயிர் காப்பீட்டுத் தொகையை வழங்க வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடைபெற்றது.
திருவாரூர் மாவட்டத்தில் விடுபட்டுள்ள 213 கிராமங்களுக்கும் பயிர் காப்பீட்டு தொகையை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் தலைவர் பிஆர் பாண்டியன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அனைத்து கிராமங்களுக்கும் பயிர் காப்பீட்டுத் தொகை வழங்க வலியுறுத்தியும் மத்திய மாநில அரசுகளை கண்டித்தும் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தினர் முழக்கங்களை எழுப்பினர்.