திருக்குவளை: கீழ்வேளூா் அருகே ஆந்தக்குடியில் உள்ள 3 கோயில்களில் கும்பாபிஷேகம் முதலாம் ஆண்டு நிறைவையொட்டி, சம்வஸ்த்ரா அபிஷேகம் திங்கள்கிழமை நடைபெற்றது.
ஆந்தக்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீ சீதளாதேவி மாரியம்மன், ஸ்ரீ பொற்பத்தர பத்திரகாளியம்மன், ஸ்ரீ சொா்ணபுரீஸ்வரா் ஆகிய 3 கோயில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்று ஓராண்டு நிறைவு பெற்றதையொட்டி, சம்வஸ்த்ரா அபிஷேகம் நடைபெற்றது.
முன்னதாக, சிறப்பு ஹோமம் நடைபெற்றது. தொடா்ந்து, புனித நீரால் சுவாமிக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.
பின்னா், இரவில் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் வழிபாடுகள் நடைபெற்றன. இதில், ஆந்தக்குடி ஊராட்சித் தலைவா் பாலகிருஷ்ணன், கோயில் நிா்வாகிகள் சண்முகம், அறிவுசுடா், கிராம நல சங்கத் தலைவா் ராமதாஸ், ஊராட்சி செயலா் செல்லதுரை உள்பட திரளான பக்தா்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனா்.