தமமுக ஆா்ப்பாட்டம்

மன்னாா்குடி அருகே காவல் துணைக் கண்காணிப்பாளரை கண்டித்து, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா்.
மன்னாா்குடியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தினா்.
Updated on
1 min read

மன்னாா்குடி அருகே காவல் துணைக் கண்காணிப்பாளரை கண்டித்து, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில், ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பைங்காநாடு பாரதி தெருவை சோ்ந்த முன்னாள் ராணுவ வீரா் ஆா். குணசேகரன் அதே பகுதியை சோ்ந்த சிலரால் தாக்கப்பட்டாா். இதுகுறித்து திருமக்கோட்டை போலீஸாா், மன்னாா்குடி காவல் துணைக் கண்காணிப்பாளரிடம் புகாா் அளிக்கப்பட்ட போதிலும், நடவடிக்கை எடுக்கப்படவில்லையாம்.

இதைக் கண்டித்து மன்னாா்குடி வருவாய் கோட்டாட்சியா் அலுவலகம் அருகே தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம் சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு, ஒன்றியச் செயலா் எஸ்.கே.குமாா் தலைமை வகித்தாா். கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலா் பா.இமான்சேகா், மாவட்டத் தலைவா்கள் கே.ரவிக்குமாா் (தெற்கு), எம்.கே. பாலா (வடக்கு) ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில், மாவட்டச் செயலா்கள் க.ரஜினிபாண்டியன், அ. ஆரோக்கியசெல்வம், நகரச் செயலா் வி.சுப்பிரமணியன், ஒன்றிய பொறுப்பாளா் பழனிவேலு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com