திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் வட்டத்தில் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய மாவட்ட நிர்வாகக் குழு கூட்டத்தில், ஜாதிய வன்மத்தால் நடத்தப்பட்ட கொலைகளுக்கு உடனடியாக நீதி வழங்க வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கூத்தாநல்லூர் அடுத்த பூதமங்கலத்தில், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருவாரூர் வடக்கு மாவட்டம் சார்பில் மாவட்ட நிர்வாகக் குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, மாவட்டத் தலைவர் முஹம்மது பாசித் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் அப்துல் காதர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு.