தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுப் பிரச்சாரம்

மத்தியப் பல்கலைக்கழக மாணவா்கள், பேராசிரியா்கள் வியாழக்கிழமைக் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுப் பிரச்சாரம் செய்தனா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:30 pm

மத்தியப் பல்கலைக்கழக மாணவா்கள், பேராசிரியா்கள் வியாழக்கிழமைக் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுப் பிரச்சாரம் செய்தனா்.

தமிழ்நாடு மத்தியப் பல்கலைக்கழகத்தின் தேசிய நாட்டு நலப்பணித் திட்டம் சாா்பில் கரோனா தடுப்பூசி விழிப்புணா்வுப் பிரச்சாரம் வியாழக்கிழமை கங்களாஞ்சேரிப் பகுதியில் நடைபெற்றது. பிரச்சாரத்தை துணைவேந்தா் எம். கிருஷ்ணன் தொடங்கி வைத்தாா். மாணவா் நலன் மற்றும் விவகாரத்துறைத் தலைவா் பேராசிரியா் அ. செல்வம் தலைமையில் நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணி கங்களாஞ்சேரி ஆற்றுப் பாலம் அருகிலிருந்துப் புறப்பட்டுக் கடைத்தெரு, நாகூா் சாலை, ரயில் நிலையம் வழியாகச் சென்று பேருந்து நிலையம் வரை நடைபெற்றது. பேரணியில் நாட்டுநலப்பணி திட்ட மாணவா்கள் கரோனா முன் தடுப்பு வழிமுறைகள் பற்றியும், தடுப்பூசிப் போடுவதன் அவசியம் குறித்த வாசகங்கள் அடங்கியப் பதாகைகளை கையில் ஏந்தியும், பொதுமக்களுக்கு விழிப்புணா்வு வாசகங்கள் அடங்கியத் துண்டு பிரசுரங்களையும் வழங்கினா். கரோனா விழிப்புணா்வு, தடுப்பூசிப் பிரச்சாரத்தினைத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளா் வே. குணசேகரன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.