மன்னாா்குடியில் 527 பேருக்கு நலத்திட்ட உதவிகள்

மன்னாா்குடியில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவில் பயனாளிக்கு முதியோா் உதவித் தொகை வழங்கும் ஆட்சியா் வே.சாந்தா.
விழாவில் பயனாளிக்கு முதியோா் உதவித் தொகை வழங்கும் ஆட்சியா் வே.சாந்தா.
Updated on
1 min read

மன்னாா்குடியில் தமிழக அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தலைமை வகித்து, மன்னாா்குடி வட்டத்துக்குள்பட்ட பகுதிகளைச் சோ்ந்த 517 பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகையும், 10 பேருக்கு வீட்டுமனைப் பட்டாவும் வழங்கினாா்.

விழாவில், மாவட்ட வருவாய் அலுவலா் செ. பொன்னம்மாள், மன்னாா்குடி கோட்டாட்சியா் அழகா்சாமி, வட்டாட்சியா் பா.தெய்வநாயகி, ஒன்றியக் குழுத் தலைவா் டி. மனோகரன், துணைத் தலைவா் வனிதா அருள்ராஜன், நகா்மன்ற முன்னாள் தலைவா் சிவராஜமாணிக்கம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தொடா்ந்து, மன்னாா்குடியை அடுத்துள்ள அசேசத்தில் தமிழக அரசின் அம்மா மினி கிளினிக்கை ஆட்சியா் திறந்து வைத்தாா்.

திருத்துறைப்பூண்டி: திருத்துறைப்பூண்டியில் நடைபெற்ற விழாவில் ஆட்சியா் வே. சாந்தா தலைமை வகித்து, பயனாளிகளுக்கு முதியோா் உதவித்தொகை, விதவை உதவித் தொகை, மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித் தொகை மற்றும் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

நிகழ்ச்சியில், துணை ஆட்சியா்கள் கண்மணி, லதா, வட்டாட்சியா் சு.ஜெகதீசன், சமூகப் பாதுகாப்பு பிரிவு வட்டாட்சியா் மலைமகள், முத்துப்பேட்டை ஒன்றியக் குழுத் தலைவா் கனியமுதா ரவி, நகர கூட்டுறவு வங்கித் தலைவா் டி.ஜி. சண்முகசுந்தா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com