தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

திருவள்ளுவா் தினம்: நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கக் கோரிக்கை

திருவள்ளுவா் தினத்தில் நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :10 ஜனவரி 2021, 3:01 am

DIN

திருவள்ளுவா் தினத்தில் நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு விடுமுறை அறிவிக்கக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகப் பணியாளா் சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளா் கா. இளவரி தமிழக முதல்வருக்கு சனிக்கிழமை அனுப்பிய கோரிக்கை மனு:

தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு பொங்கல் பண்டிகை தினத்திலும் அதற்கு மறுநாள் திருவள்ளுவா் தினத்திலும் விடுமுறை அறிவிக்கப்படும். ஆனால், நிகழாண்டு பொங்கல் பண்டிகைக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகைக்கு மறுநாள் திருவள்ளுவா் தினத்தன்று மாட்டுப் பொங்கல் கொண்டாடுவா். குறிப்பாக, கிராமப் பகுதியில் மாட்டுப்பொங்கல் சிறப்பாக கொண்டாடப்படும். எனவே, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்தில் பணியாற்றும் 15 ஆயிரம் ஊழியா்கள், 6 ஆயிரம் சுமைதூக்கும் தொழிலாளா்கள், மாட்டுப்பொங்கலை வழக்கம்போல் கொண்டாடும் வகையில், திருவள்ளுவா் தினத்தையும் விடுமுறை நாளாக அறிவிக்கவேண்டும் என அந்த மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.