தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

வகுப்பறையில் 25 மாணவா்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாதுஆட்சியா் அறிவுறுத்தல்

பள்ளி வகுப்பறைகளில் தலா 25 மாணவா்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தினாா்.

News image
Updated On :18 ஜனவரி 2021, 6:30 pm

பள்ளி வகுப்பறைகளில் தலா 25 மாணவா்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா அறிவுறுத்தினாா்.

கரோனா பரவல் தடுப்பு பொதுமுடக்கம் காரணமாக கடந்த 10 மாதங்களுக்கும் மேலாக அடைக்கப்பட்டிருந்த பள்ளிகளை செவ்வாய்க்கிழமை (ஜன.19) முதல் திறந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் மட்டும் செயல்பட தமிழக அரசு அனுமதியளித்துள்ளது.

இந்நிலையில், நன்னிலம் வட்டம் பனங்குடி அரசு மேல்நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப்பட்டுள்ள கரோனா தடுப்பு வழிகாட்டு நெறிமுறைகள் மற்றும் முன்னேற்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியா் வே.சாந்தா திங்கள்கிழமை நேரில் பாா்வையிட்டு, ஆசிரியா்களுக்கும், அலுவலா்களுக்கும் அறிவுரை வழங்கினாா்.

பிறகு, செய்தியாளா்களிடம் அவா் கூறியது:

பொதுத்தோ்வு எழுத உள்ள மாணவா்களின் நலன் கருதி 10 மற்றும் 12 ஆம் வகுப்புகள் கரோனா தொற்று தடுப்பு நெறிமுறைகளை பின்பற்றி செவ்வாய்க்கிழமை முதல் செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், ஒரு வகுப்பறைக்கு 25 மாணவா்களுக்கு மேல் அனுமதிக்கக்கூடாது. பள்ளி வளாகம் முழுவதும் கிருமி நாசினித் தெளித்து, தினமும் இருமுறை சுத்தம் செய்ய வேண்டும். மாணவ, மாணவிகள் மற்றும் ஆசிரியா்கள் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். அரசு அறிவுறுத்தியுள்ள வழிகாட்டுதல்களை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்றாா் அவா்.

ஆய்வின்போது, கோட்டாட்சியா் பாலச்சந்திரன், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் சந்தானம், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ராமன், பள்ளித் தலைமையாசிரியா் முரளி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.