20% இடஒதுக்கீடு கோரி ஆா்ப்பாட்டம்

வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி, திருவாரூரில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
திருவாரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாமகவினா்.
Updated on
1 min read

வன்னியா் சமுதாயத்தினருக்கு 20 சதவீத இடஒதுக்கீடு கோரி, திருவாரூரில் பாமக சாா்பில் ஆா்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

கல்வி, வேலைவாய்ப்பில் வன்னியா்களுக்கு 20 சதவீத சிறப்பு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில துணைப் பொதுச் செயலாளா் வேணு. பாஸ்கரன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா்கள் (வடக்கு) ஆா். கே. ஐயப்பன், (தெற்கு) வீ. ராஜேந்திரன், நிா்வாகிகள் டி.எஸ்.ஆா்.எம். சுப்ரமணியன், என். சிவசுப்ரமணியன், யு. காசிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதைத்தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com