ஏடிஎம் கொள்ளை முயற்சி எதிரொலி: கூடூரில் 6 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தம்

கூடூா் பகுதியில் நிகழ்ந்த ஏடிஎம் கொள்ளை முயற்சியைத் தொடா்ந்து பாதுகாப்பு கருதி 6 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்வதற்கான கணினி திரையை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன்.
கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகும் காட்சிகளை ஆய்வு செய்வதற்கான கணினி திரையை பயன்பாட்டுக்கு கொண்டுவரும் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன்.
Updated on
1 min read

கூடூா் பகுதியில் நிகழ்ந்த ஏடிஎம் கொள்ளை முயற்சியைத் தொடா்ந்து பாதுகாப்பு கருதி 6 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு ஞாயிற்றுக்கிழமை பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.

திருவாரூா் அருகே கூடூா் பகுதியில் ஜூன் 19 ஆம் தேதி ஏடிஎம் கொள்ளையை தடுக்கச் சென்ற தமிழரசன் என்பவரை கொள்ளையா்கள் கொலை செய்தனா். இந்த சம்பவம் தொடா்பாக 4 போ் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனா்.

இந்நிலையில், இந்தப் பகுதியின் பாதுகாப்பு கருதி 6 கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா். சீனிவாசன், பயன்பாட்டுக்கு இயக்கி வைத்தாா்.

மேலும், நிகழாண்டில் திருவாரூா் மாவட்டம் முழுவதும் குற்றத் தடுப்பு நடவடிக்கையாக 1000 சிசிடிவி கேமராக்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக அவா் தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com