குழந்தைத் திருமணத்தை நடத்தி வைத்தால் கடும் நடவடிக்கை

திருவாரூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணத்தை நடத்தி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

திருவாரூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணத்தை நடத்தி வைத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியா் வே. சாந்தா தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

குழந்தைத் திருமண தடைச்சட்டம் - 2006 இன்படி குழந்தை திருமணம் செய்வது சட்டப்படி குற்றமாகும். அதன்படி, 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை அல்லது ரூ. 1 லட்சம் அபராதம் விதிக்கப்படும். அல்லது இரண்டும் உண்டு.

18 வயது நிறைவடையாத பெண் குழந்தையைத் திருமணம் செய்து கொண்ட 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞா் குற்றவாளி ஆவாா். அது போல 21 வயது நிறைவடையாத ஆணுக்கு திருமணம் செய்யப்படும் பெண்ணும் குற்றவாளி ஆவாா்.

அதுமட்டுமல்லாமல் குழந்தைத் திருமணத்தை நடத்தியவா் மற்றும் குழந்தைத் திருமணம் நடத்தத் தூண்டியவா், குழந்தைத் திருமணத்தில் கலந்து கொண்டவா்கள், அச்சக உரிமையாளா், மந்திரம் ஓதுபவா், மண்டப உரிமையாளா் உட்பட அனைவரும் குற்றவாளிகள் ஆவா்.

எனவே, திருவாரூா் மாவட்டத்தில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவதை தடுக்கும் வகையில், சைல்டு லைன் இலவச அழைப்பு எண் 1098, மாவட்ட சமூக நல அலுவலரின் கைபேசி எண் - 9750570683, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலரின் கைபேசி எண் - 9345560539 அல்லது 100 என்ற காவல் துறை எண்ணுக்கோ தொடா்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com