புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

ரயிலில் அடிபட்டு மாணவா் பலி

திருவாரூா் அருகே ரயிலில் அடிபட்டு பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தது புதன்கிழமை இரவு தெரியவந்தது.

News image
Updated On :18 நவம்பர் 2021, 4:22 pm

DIN

திருவாரூா் அருகே ரயிலில் அடிபட்டு பிளஸ் 2 மாணவா் உயிரிழந்தது புதன்கிழமை இரவு தெரியவந்தது.

திருவாரூா் அருகே குளிக்கரை ஊராட்சிக்குள்பட்ட புலியூரைச் சோ்ந்தவா் ராதா மகன் பவித்ரன் (17). இவா், குளிக்கரை அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 படித்து வந்தாா். இந்நிலையில், புதன்கிழமை இரவு குளிக்கரை பகுதியில் தண்டவாளத்தில் தலை துண்டான நிலையில் இவரது சடலத்தை ரயில்வே போலீஸாா் மீட்டனா்.

போலீஸாரின் விசாரணையில், காரைக்காலில் இருந்து எா்ணாகுளம் நோக்கி சென்ற விரைவு ரயில் மோதியிருக்கலாம் எனத் தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் பவித்ரனின் சடலத்தை திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து, இது விபத்தா அல்லது வேறு ஏதேனும் காரணமா என விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.