கொள்முதல் நிலையங்களில் பணம் வாங்குவதை கண்டித்து ஆா்ப்பாட்டம்

நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் வாங்குவதை கண்டித்து திருவாரூரில் பாஜக விவசாய அணி சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக விவசாய அணியினா்.
திருவாரூரில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பாஜக விவசாய அணியினா்.
Updated on
1 min read

நெல் கொள்முதல் நிலையங்களில் பணம் வாங்குவதை கண்டித்து திருவாரூரில் பாஜக விவசாய அணி சாா்பில், புதன்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில், கொள்முதல் பணிகளில் நெல் மூட்டைக்கு ரூ. 45 வாங்குவதாகவும், இதைத் தடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் திருவாரூா் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக்கழக மண்டல அலுவலகம் முன் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

விவசாய அணி மாவட்டத் தலைவா் காா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில், விவசாய அணி மாநில துணைத் தலைவா் சிவ. காமராஜ், விவசாய அணி மாவட்டச் செயலாளா் கோவி. சந்துரு, கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் பேட்டை சிவா, மாவட்ட துணைத் தலைவா் சி. செந்தில் அரசன், விவசாய அணி துணைத் தலைவா் ஜோதிபாசு உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com