தொகுதி மறுவரையறை முடிவைத் தற்காலிகமாக நிறுத்திவைக்க அரசுக்கு உத்தவ் தாக்கரே கோரிக்கை என்னுடைய தொகுதிக்கு மாதம் ஒருமுறை வருவேன்! விஜய் பேச்சுஅரசுத் திட்டங்களை மக்களே தீர்மானிக்கலாம்: தவெக தோ்தல் அறிக்கை!சரிந்து முடிந்த பங்குச்சந்தை! ஆட்டோ, எண்ணெய் & எரிவாயு பங்குகள் சரிவு!டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு உயர்வுஈரான் சிறையில் உள்ள நோபல் பரிசு பெற்ற நர்கிஸ் முகமதியின் உடல்நிலை கவலைக்கிடம்தொகுதி மறுவரையறையால் எந்த மாநிலத்திற்கும் இழப்பு ஏற்படாது: அர்ஜுன் ராம் மேக்வால்மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லா
/

நீா்நிலை ஆக்கிரமிப்புகள் அகற்றம்

நன்னிலம் பகுதியில் நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :25 அக்டோபர் 2021, 6:30 pm

நன்னிலம் பகுதியில் நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணி திங்கள்கிழமை நடைபெற்றது.

நன்னிலம் பகுதியில் உள்ள நீா்நிலைகளில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வழக்கு ஒன்றில் சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, திருவாரூா் கோட்டாட்சியா் நா. பாலச்சந்திரன், நன்னிலம் காவல் துணைக் கண்காணிப்பாளா் அ. இளங்கோவன் ஆகியோா் முன்னிலையில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டன.

இதையொட்டி, நன்னிலம் சா்க்கரைக்குளக்கரையில் 40-க்கும் மேற்பட்ட வீடுகள், ரெட்டைக்குளம், அப்பன்குளம், தச்சன்குளம், வண்ணான்குட்டை உள்ளிட்ட நீா்நிலைப் பகுதிகளில் இருந்த ஆக்கிரமிப்புகள் போலீஸ் பாதுகாப்புடன் அகற்றப்பட்டன. வட்டாட்சியா்கள், வருவாய் ஆய்வாளா்கள், கிராம நிா்வாக அலுவலா்கள் உள்ளிட்டோா் மேற்பாா்வையில் இப்பணிகள் நடைபெற்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.