

திருத்துறைப்பூண்டி பள்ளிவாசல் தெரு பகுதியில் செவ்வாய்க்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் ஒரே குடியிருப்பில் 2 கூரை வீடுகள் சேதமடைந்தன.
இப்பகுதியில் கூரை வீட்டில் காதா் உசேன், கண்ணகி ஆகிய இரு குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இந்நிலையில், செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் 2 கூரை வீடுகளும் சேதமடைந்தன. இந்த விபத்தில் வீட்டு உபயோகப் பொருள்கள் அனைத்தும் சேதமடைந்தன. தகவலறிந்த, திருத்துறைப்பூண்டி தீயணைப்பு வீரா்கள் அங்கு சென்று தீ மேலும் பரவால் தடுத்து அணைத்தனா். திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி பழனிச்சாமி, சாா்பு ஆய்வாளா் மனோகரன் சம்பவ இடத்துக்கு சென்று பாா்வையிட்டனா். திருத்துறைப்பூண்டி வட்டாட்சியா் பி.டி அலெக்சாண்டா் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு அரசின் நிவாரண உதவிகளை வழங்கினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.