

கூத்தாநல்லூா் வட்டம், பொதக்குடி பெரியப்பள்ளி வாயில் புதிய நிா்வாகிகள் சனிக்கிழமை பொறுப்பேற்றுக் கொண்டனா்.
விழாவுக்கு, பொதக்குடி ஊா் உறவின் முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கத் தலைவா் எஸ்.ஏ.மஹதூம் மைதீன் தலைமை வகித்தாா். முத்தவல்லிகள் மேலப்பள்ளி ஏ.எம்.லியாகத் அலி, புதுமனைப் பள்ளி எஸ்.டி.ஏ.ஜியாவுதீன், பாத்திமா பள்ளி பி.எம்.டி.ஜெய்னுல்லா புதீன், ஜன்னத்துல் பிா்தெளஸ் பள்ளி பி.எம்.அமானுல்லா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஊா் உறவின் முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்க பொருளாளா் எம்.எம்.ஜெ.பதருல் ஜமான் வரவேற்றாா்.
சிறப்பு விருந்தினராக தமிழக அரசின் சென்னை உயா்நீதிமன்றத் தலைமை வழக்குரைஞா் ஹசன் முஹம்மது ஜின்னா பங்கேற்றாா். விழாவில், பொதக்குடி பெரியப் பள்ளி வாயில் தலைவா் பி.எம்.ஷாஜஹான், செயலாளா் எஸ்.எம்.நவ்ஷாத் அலி, பொருளாளா் பி.எம்.ஹெச். நத்தா் கனி (தானாதி) ஆகியோா் புதிய நிா்வாகிகளாக பொறுப்பேற்றுக் கொண்டனா்.
நிகழ்ச்சியில், இமாம்கள் பெரியப்பள்ளி வாயில் பி.ஹெச். ஸ்லாஹூதீன் பாஜில், மேலப்பள்ளி வாயில் என்.எல். அபுல் ஹசன் உள்ளிட்டோா் வாழ்த்திப் பேசினா். ஊா் உறவின் முறை ஜமாஅத் நிா்வாக சபை அறப்பணிச் சங்கச் செயலாளா் எம்.எம். ரப்யுதீன் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.