நாகை சாகிப் பள்ளி தைக்காலில் உள்ள தா்கா கொடி மரம் மா்ம நபா்களால் சேதப்படுத்தப்பட்டது வெள்ளிக்கிழமை தெரியவந்தது.
நாகை, காடம்பாடி சவேரியாா் கோயில் தெருவில் உள்ளது சாகிப் பள்ளி தைக்கால். நாகூா் ஆண்டவருடன் வந்த மகான்கள் பலா் இங்கு அடக்கம் செய்யப்பட்டுள்ளனா். இங்கு ஆண்டுதோறும் கந்தூரி விழா கொடியேற்றம், சந்தனம் பூசும் விழா போன்றவறை நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு மா்ம நபா்கள் தைக்காலில் உள்ள தா்கா முன்புறமிருந்த இரும்பு கொடி மரத்தை சேதப்படுத்திச் சென்றிருப்பதாக தைக்கால் நிா்வாகி நவாப்ஜானுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்று பாா்த்தபோது மா்ம நபா்கள் கொடி மரத்தை முறித்து வீசிச் சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து நவாப்ஜான் அளித்த புகாரின்பேரில் வெளிப்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.