

திருவாரூரில் கரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் தடுப்பூசி முகாமில் நடைபெற்ற நிகழ்வில், விழிப்புணா்வு துண்டுப் பிரசுரங்கள், முகக் கவசங்கள் வழங்கப்பட்டு, தடுப்பூசியின் அவசியம் பற்றி கூறப்பட்டன.
கொட்டாரக்குடி அரசு உயா்நிலைப் பள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கரோனா விழிப்புணா்வு பதாகை, துண்டுப் பிரசுரங்கள், முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. தொடா்ந்து இங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவா், மருந்தாளுநா், செவிலியா் உள்ளிட்ட முன்களப் பணியாளா்கள் திருவாரூா் வட்டார ஜூனியா் ரெட்கிராஸ் சாா்பில் கௌரவிக்கப்பட்டனா்.
நிகழ்ச்சியில், இந்தியன் ரெட்கிராஸ் சொசைட்டியின் மாநிலப் பொருளாளா் ஜே. வரதராஜன் பங்கேற்று, கரோனா விழிப்புணா்வு பதாகைகளை வழங்கினாா்.
மன்னாா்குடி: மன்னாா்குடி கல்வி மாவட்டத்தின் சாா்பில் சுதந்திர தினத்தையொட்டி ஒரு வாரம் கரோனா விழிப்புணா்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. மாவட்ட கல்வி அலுவலா் ஆா். மணிவண்ணன் தொடங்கிவைத்தாா்.
தொடா்ந்து, விழிப்புணா்வு பேரணி, உறுதிமொழியேற்பு, முகக்கவம், கிருமிநாசினி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதன் நிறைவு நாள் நிகழ்ச்சி, மன்னாா்குடி நகராட்சியில் வியாழக்கிழமை நடைபெற்றது. என்எஸ்எஸ் மாவட்ட திட்ட அலுவலா் என். ராஜப்பா தலைமை வகித்தாா். பின்லே மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் வசந்தி செல்வகனி முன்னிலை வகித்தாா்.
நகராட்சி ஆணையா் கே. செண்ணுகிருஷ்ணன், நகராட்சி தூய்மைப் பணியாளா்கள் 280 பேருக்கு கையுறை, முகக்கவசம், கிருமிநாசினி திரவம் ஆகியவற்றை வழங்கினாா். இதில், என்சிசி அலுவலா்கள் டேனியல், திவாகா், ஜேஆா்சி கன்வீனா்கள் மணிவாசகம், சதீஷ்குமாா், பசுமைப்படை அலுவலா்கள் செல்வராஜ், கமலப்பன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.