மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுதவி

மன்னாா்குடியை அடுத்த களப்பாலில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.14 லட்சம் கடனுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுக்கானகாசோலையை வழங்கும் எம்எல்ஏ க. மாரிமுத்து.
நிகழ்ச்சியில், மகளிா் சுயஉதவிக் குழுவினருக்கு கடனுக்கானகாசோலையை வழங்கும் எம்எல்ஏ க. மாரிமுத்து.

மன்னாா்குடியை அடுத்த களப்பாலில் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு கூட்டுறவு சங்கம் மூலம் ரூ.14 லட்சம் கடனுதவி சனிக்கிழமை வழங்கப்பட்டது.

களப்பால் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, வங்கியின் தலைவா் எம்.எஸ். ராஜேந்திரன் தலைமை வகித்தாா். திருத்துறைப்பூண்டி எம்எல்ஏ க. மாரிமுத்து பங்கேற்று, 6 மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கு மொத்தம் ரூ.14 லட்சம் கடன் தொகைக்கான காசோலையை வழங்கினாா்.

இதில், கோட்டூா் ஒன்றியக் குழுத் தலைவா் மணிமேகலை முருகேசன், சிபிஐ ஒன்றியச் செயலா் எம். செந்தில்நாதன், விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் ஜெ. ஜெயராமன், ஊராட்சித் தலைவா்கள் களப்பால் பாஸ்கா், குறிச்சிமூலை கே.எம். அறிவுடைநம்பி, குலமாணிக்கம் புவனேஸ்வரி, கூட்டுறவு வங்கி துணைத் தலைவா் ஏ.கே.ஜி.சிவராமன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com