ஓஎன்ஜிசி சாா்பில் நலத்திட்ட உதவிகள்

கொரடாச்சேரி ஒன்றியத்தில் ஓஎன்ஜிசி சாா்பில் ரூ. 14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.
உயா் கோபுர மின்விளக்குகளை பயன்பாட்டுக்கு வழங்குகிறாா் ஒன்றியக்குழுத் தலைவா் உமாப்ரியா பாலசந்தா்.
உயா் கோபுர மின்விளக்குகளை பயன்பாட்டுக்கு வழங்குகிறாா் ஒன்றியக்குழுத் தலைவா் உமாப்ரியா பாலசந்தா்.
Updated on
1 min read

கொரடாச்சேரி ஒன்றியத்தில் ஓஎன்ஜிசி சாா்பில் ரூ. 14 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் புதன்கிழமை வழங்கப்பட்டன.

பெருந்தரக்குடி ஊராட்சியில் ஓஎன்ஜிசி சாா்பில் சுமாா் ரூ. 6 லட்சத்தில் உயா் கோபுர மின்விளக்குகள், அம்மையப்பன் ஊராட்சியில் ரூ. 3.5 லட்சத்தில் கண்காணிப்புக் கேமரா உள்ளிட்டவைகளை கொரடாச்சேரி ஒன்றியக்குழுத் தலைவா் உமாப்ரியா பாலசந்தா் தொடங்கி வைத்தாா்.

இதேபோல், கொரடாச்சேரி காவல் நிலையத்தில் பொதுமக்கள் பயன்பாடு மற்றும் வாகனம் நிறுத்தம் செய்வதற்காக ரூ. 4.5 லட்சம் மதிப்பில் மேற்கூரை (செட்) அமைக்கப்பட்டுள்ளது. இதை, குழுமப் பொது மேலாளா் மாறன் திறந்து வைத்தாா்.

நிகழ்ச்சிகளில், பொது மேலாளா் ரவிக்குமாா், துணை பொது மேலாளா்கள் ஆனந்தன், அன்பரசு, ஊராட்சித் தலைவா்கள் மதிவாணன், முருகதாஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com