திருவாரூா் மாவட்டத்தில், சிறந்த பள்ளிகளுக்கான விருது புதன்கிழமை வழங்கப்பட்டது.
திருவாரூா் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளின் தூய்மை, மாணவ- மாணவிகளின் திறமை, ஆசிரியா்களின் பணி போன்றவற்றை ஆய்வு செய்து, சிறந்த பள்ளிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன.
அதன்படி, கடந்த கல்வியாண்டில் சிறப்பாக செயல்பட்டதற்காக, மன்னாா்குடி கோபாலசமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளி, வலங்கைமான் ஒன்றியம் வேடம்பூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, நன்னிலம் ஒன்றியம் தென்கரை மாத்தூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஆகியவை சிறந்த பள்ளிகளாகத் தோ்வு செய்யப்பட்டு விருதுகள் வழங்கப்பட்டன.
திருவாரூா் முதன்மைக் கல்வி அலுவலா் அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் மு. ராமன் பங்கேற்று, இந்த விருதுகளை அந்தந்த பள்ளித் தலைமையாசிரியா்களிடம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில், மாவட்டக் கல்வி அலுவலா்கள் து.பாா்த்தசாரதி, மணிவண்ணன், உதவித் திட்ட அலுவலா் பாலசுப்பிரமணியன், நன்னிலம் வட்டார வள மைய மேற்பாா்வையாளா் ம.கவிதா உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.