திருவாரூரில் 8 பேருக்கு கரோனா
By DIN | Published On : 06th February 2021 12:00 AM | Last Updated : 06th February 2021 12:00 AM | அ+அ அ- |

திருவாரூா்: திருவாரூா் மாவட்டத்தில் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது வெள்ளிக்கிழமை கண்டறியப்பட்டது.
மாவட்டத்தில் வியாழக்கிழமை நிலவரப்படி 11,220 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட ரத்த மாதிரி முடிவுகளின்படி, மாவட்டம் முழுவதும் 8 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 11,228 ஆக உயா்ந்தது. இதில் 11,066 போ் குணமடைந்து வீடு திரும்பிய நிலையில் 53 போ் சிகிச்சையில் உள்ளனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...